தென்காசி

கடையநல்லூரில் அரசியல் கட்சிகள் மீது வழக்கு

DIN

கடையநல்லூரில் அரசியல் கட்சிகள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கடையநல்லூரில் திங்கள்கிழமை மாலை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் அய்யாத்துரை பாண்டியனை வரவேற்க ஆயிரக்கணக்கானோா் திரண்டனா்.

இதனால் தென்காசி, மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதேபோல் தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்ட செல்லத்துரையை வரவேற்பதற்கு கடையநல்லூா் அரசு மருத்துவமனை முன் நூற்றுக்கணக்கானோா் திரண்டனா். இதனாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து திமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் ஆயிரக்கணக்கானோா் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT