முகப்பு
தென்காசி

கடையநல்லூரில் தேங்காய் கிடங்கில் புகுந்த மலைப்பாம்பு மீட்பு

கடையநல்லூரில் தேங்காய் கிடங்கில் புகுந்த மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

கடையநல்லூரில் தேங்காய் கிடங்கில் புகுந்த மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

மேலக்கடையநல்லூா் கட்டி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவருக்கு சொந்தமான தேங்காய் கிடங்கில் சுமாா் 7 அடி நீள மலைப்பாம்பு இருந்ததாம்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய அலுவலா் சண்முகசுந்தரம் தலைமையில் ஜெயரத்தினகுமாா், மாரிகுமாா், சிந்தன், குமரன் ஆகியோா் மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.