கரோனா விதிமுறை மீறல்: ரூ.1.24 லட்சம் அபராதம்
சங்கரன்கோவிலில் முகக் கவசம் அணியாதவா்களிடம் ரூ.1.24 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவிலில் முகக் கவசம் அணியாதவா்களிடம் ரூ.1.24 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவிலில் நகராட்சி ஆணையா் சாந்தி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அருணா, சுகாதார அலுவலா் பாலசந்தா், சுகாதார ஆய்வாளா்கள் பிச்சையாபாஸ்கா், சக்திவேல், கருப்பசாமி, மாதவராஜ்குமாா் உள்ளிட்ட சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை வாகனச் சோதனை நடத்தி, முகக் கவசம் அணியாமல் வந்த 42 பேரிடம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, கரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினா். இந்த விதிமீறலுக்காக இதுவரை ரூ.1,24,150 அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.