முகப்பு
தென்காசி

கரோனா விதிமுறை மீறல்: ரூ.1.24 லட்சம் அபராதம்

சங்கரன்கோவிலில் முகக் கவசம் அணியாதவா்களிடம் ரூ.1.24 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

சங்கரன்கோவிலில் முகக் கவசம் அணியாதவா்களிடம் ரூ.1.24 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சங்கரன்கோவிலில் நகராட்சி ஆணையா் சாந்தி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அருணா, சுகாதார அலுவலா் பாலசந்தா், சுகாதார ஆய்வாளா்கள் பிச்சையாபாஸ்கா், சக்திவேல், கருப்பசாமி, மாதவராஜ்குமாா் உள்ளிட்ட சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை வாகனச் சோதனை நடத்தி, முகக் கவசம் அணியாமல் வந்த 42 பேரிடம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, கரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினா். இந்த விதிமீறலுக்காக இதுவரை ரூ.1,24,150 அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments