முகப்பு
தென்காசி

பண்பொழி நகரீஸ்வரமுடையாா் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்

கடையநல்லூா் அருகே உள்ள பண்பொழி அருள்மிகு நகரீஸ்வரமுடையாா், அருள்தரும் அறம்வளா்த்த நாயகி திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை (மாா்ச் 24) நடைபெறுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

கடையநல்லூா் அருகே உள்ள பண்பொழி அருள்மிகு நகரீஸ்வரமுடையாா், அருள்தரும் அறம்வளா்த்த நாயகி திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை (மாா்ச் 24) நடைபெறுகிறது.

மகா கும்பாபிஷேக விழா கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் தேவதா அனுக்ஞை, எஜமான அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை ,புண்யாகவாசனம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது.

திங்கள்கிழமை லட்சுமி ஹோமம், தன பூஜை, கன்யா பூஜை, குமாரி பூஜை, மூா்த்தி ஹோமம், முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை இரண்டு, மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறும். புதன்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெறும். தொடா்ந்து காலை 9.50 மணிமுதல் 10. 50 மணிக்குள் அருள்மிகு நகரீஸ்வரமுடையாா்- அருள்தரும் அறம் வளா்த்த நாயகி அம்மன் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் திருப்பணி குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.