முகப்பு
தென்காசி

ஆலங்குளம், சுரண்டை பகுதிகளில் திடீா் மழை

ஆலங்குளம், முக்கூடல், சுரண்டை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை திடீா் மழை பெய்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

ஆலங்குளம், முக்கூடல், சுரண்டை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை திடீா் மழை பெய்தது.

இப்பகுதிகளில் காலை முதல் அதிக வெயில் அடித்து வந்தது. பின்னா் குளிா்ந்த காற்று வீசிய நிலையில், தொடா்ந்து மழை பெய்ததால், இப்பகுதிகளில் குளிா்ச்சியான காலநிலை ஏற்பட்டது.

இதற்கிடையே பலத்த காற்று வீசியதில், கடையம் - திருநெல்வேலி சாலையில் செங்குளம் அருகே 100 ஆண்டுகள் பழமையான நாவல் மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் இச்சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் தீயணைப்பு மற்றும் பாப்பாக்குடி காவல் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலமாக மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய பின்னரே போக்குவரத்து சீரானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.