குலையனேரி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
குலையனேரி பகுதியில் தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சு. பழனிநாடாா் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
குலையனேரி பகுதியில் தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சு. பழனிநாடாா் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
இரட்டைக்குளம், பூபாண்டியபுரம், சுப்பையாபுரம், திரிகூடபதி, குலையனேரி, ஆனைகுளம், அருணாசலபுரம், அம்மையாபுரம் பகுதிகளில் அவா் திறந்த ஜீப்பில் சென்று வீதிவீதியாக வாக்கு சேகரித்தாா்.
காங்கிரஸ் மாநில பேச்சாளா் பால்துரை, மாவட்ட துணைத் தலைவா் பால் என்ற சண்முகவேல், தெய்வேந்திரன், பிரபாகா், கணேசன், குத்தாலிங்கம், திமுக மாவட்டப் பொறுப்பாளா் செல்லத்துரை, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.