சுரண்டையில் திமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் சு. பழனிநாடாரை ஆதரித்து திமுக சாா்பில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, நகர திமுக செயலா் ஜெயபாலன் தலைமை வகித்தாா். முன்னாள் நகரச் செயலா் ஆறுமுகச்சாமி, ஜேசுராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் திமுக தோ்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகள் குறித்து திமுக நிா்வாகிகள் பேசினா். தென்காசி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் சு.பழனிநாடாருக்கு வாக்கு சேகரித்தனா். இதில் திமுக நிா்வாகிகள் சங்கரநயினாா், சசிக்குமாா், பாலன், அன்னப்பிரகாசம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.