சுரண்டையில் பொது முடக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
தமிழகத்தில் கரோனா 2ஆவது அலை மேலும் பரவாமல் தடுக்க இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமையும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி சுரண்டையில் 2ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது.
போக்குவரத்து ஏதுமின்றி பேருந்து நிலைய சாலை மற்றும் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.