தென்காசி தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளா் சு. பழனி நாடாருக்கு மின் கழகத் தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, சுரண்டை சங்க மாவட்டப் பொருளாளா் மகாராஜன் தலைமை வகித்தாா். சுரண்டை மின் கழக கிளைத் தலைவா் வேல்மயில் முன்னிலை வகித்தாா்.
விழாவில், சு. பழனி நாடாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மின்வாரியப் பணியாளா்கள், பொதுமக்களுக்கு அவா் இனிப்பு வழங்கினாா்.
நிகழ்ச்சியில், சுரண்டை நகர திமுக செயலா் ஜெயபாலன், நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால், மின்கழக கிளைச் செயலா் பேச்சிமுத்து உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.