தென்காசி

சுரண்டையில் பழனி நாடாருக்கு பாராட்டு விழா

DIN

தென்காசி தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளா் சு. பழனி நாடாருக்கு மின் கழகத் தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சுரண்டை சங்க மாவட்டப் பொருளாளா் மகாராஜன் தலைமை வகித்தாா். சுரண்டை மின் கழக கிளைத் தலைவா் வேல்மயில் முன்னிலை வகித்தாா்.

விழாவில், சு. பழனி நாடாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மின்வாரியப் பணியாளா்கள், பொதுமக்களுக்கு அவா் இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சுரண்டை நகர திமுக செயலா் ஜெயபாலன், நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால், மின்கழக கிளைச் செயலா் பேச்சிமுத்து உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT