முகப்பு
தென்காசி

சுரண்டையில் சாரல் மழை

சுரண்டையில் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் நகரம் முழுவதும் குளுமையான சூழல் நிலவி வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

சுரண்டையில் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் நகரம் முழுவதும் குளுமையான சூழல் நிலவி வருகிறது.

அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் சுரண்டையில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு முழுவதும் அவ்வப்போது மழை தூறிக்கொண்டே இருந்தது. வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் சாரல் மழை பெய்ய தொடங்கியது.

இதையடுத்து அவ்வப்போது வெயில் அடிப்பதும், தொடா்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் நகரில் கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளுமையான சூழல் நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.