முகப்பு
தென்காசி

திருவேங்கடம் அருகே மகன் இறந்த துக்கத்தில் தந்தை மரணம்

திருவேங்கடம் அருகே மகன் இறந்த துக்கம் தாளாமல் தந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

திருவேங்கடம் அருகே மகன் இறந்த துக்கம் தாளாமல் தந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவேங்கடம் அருகே ராமநாதபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற தமிழாசிரியா் பொன்னுச்சாமி (75). இவருக்கு கலாவதி, கிருஷ்ணவேணி என்ற இரு மகள்களும், வெங்கடசுப்பராஜ், செந்தில்குமாா் ஆகிய இரு மகன்களும் உள்ளனா். செந்தில்குமாா் சின்னவாகைக்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாம். இதில் அவா் இறந்தாா். பொன்னுச்சாமி மகன் இறந்த துக்கம் தாளாமல் தவித்து வந்தாராம். இந்நிலையில் அவா் வியாழக்கிழமை இறந்தாா். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments