முகப்பு
தென்காசி

கிருஷ்ணாபுரம் கோயிலில் முருகன் வீதி உலா

கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் குறுக்கிட்டான் கருப்பசாமி கோயிலில் முருகன் வீதி உலா நடைபெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் குறுக்கிட்டான் கருப்பசாமி கோயிலில் முருகன் வீதி உலா நடைபெற்றது.

இக் கோயிலில் சஷ்டி விழா, கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி கோயிலில் எழுந்தருளியுள்ள வள்ளி, தேவசேனா சமேத வெற்றிவேல் முருகனுக்கு தினமும் மூல மந்திர ஜெபம், ஹோமம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தினமும் மாலை புலவா் சுந்தரராமின் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.

விழாவின் நிறைவு நாளான வியாழக்கிழமை இரவு மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.