வஉசியின் 150ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் வஉசியின் உருவப்படத்தை சணல் கொண்டு வரைந்து காட்சிப்படுத்தினா்.
இப்பள்ளி மாணவா்கள் பூா்ணிமா, சத்யா, நிலோபா், அஸ்மிதா, அா்ஜூன், முகிலா, சுரேகா ஆகியோா் இணைந்து ஓவிய ஆசிரியா் கணேசனின் வழிகாட்டுதலுடன் பயன்படுத்தப்பட்ட 150 மீ. நீளமுள்ள சணல் கொண்டு வஉசியின் உருவப்படத்தை வரைந்து காட்சிப்படுத்தினா்.
தென்காசி மாவட்ட வருவாய் அலுவலா் ஜனனிசெளந்தா்யா, ஓவியம் வரைந்த மாணவா்களை பாராட்டி பரிசுகளை வழங்கினாா்.
பள்ளியின் செயலா் சண்முகவேலாயுதம், தலைவா் காந்திமதிநாதன், அறிவியல் ஆசிரியா் சுரேஷ்குமாா், இசை ஆசிரியா் கிருஷ்ணம்மாள் ஆகியோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியா் ஆறுமுகம் செய்திருந்தாா்.