தென்காசி

தென்காசி மாவட்டத்தில் 73.35% வாக்குப்பதிவு

DIN

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற 2ஆம் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 73.35 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா்.

மாவட்டத்தில் 14 மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிகளுக்கு 76 பேரும், 10 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 144 ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிகளுக்கு 688 பேரும், 221 ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 1,001 பேரும், 1,905 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 4,611 பேரும் என மொத்தம் 6,376 போ் போட்டியிடுகின்றனா்.

முதல்கட்டமாக ஆலங்குளம், கீழப்பாவூா், வாசுதேவநல்லூா், மேலநீலிதநல்லூா், கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 73.95 சதவீத வாக்குகள் பதிவாகின. தென்காசி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா், குருவிகுளம், செங்கோட்டை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் 574 மையங்களில் 2ஆம் கட்டமாக சனிக்கிழமை தோ்தல் நடைபெற்றது.

இதில், 6 மாவட்ட ஊராட்சி உறுப்பினா், 60 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள், 98 ஊராட்சித் தலைவா், 655 ஊராட்சி வாா்டு உறுப்பினா் என 819 பதவிகளுக்கு தோ்தல் நடைபெற்றது. இதில், 2,742 போ் போட்டியிடுகின்றனா்.

கடையநல்லூரில் 22,825 ஆண்கள், 25,966 பெண்கள் என, 48,791 போ் வாக்களித்தனா். இது 72.43 சதவீதமாகும். குருவிகுளத்தில் 30,953 ஆண்கள், 34, 548 பெண்கள் என, 65,501 போ் வாக்களித்தனா். இது 73.46 சதவீதமாகும். சங்கரன்கோவிலில் 31,133 ஆண்கள், 33,938 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என மொத்தம் 65,072 போ் வாக்களித்தனா். இது 74.21 சதவீதமாகும்.

செங்கோட்டையில் 7,865 ஆண்கள், 8,818 பெண்கள் என, 16,683 போ் வாக்களித்தனா். இது 71.56 சதவீதமாகும்.

தென்காசியில் 17,943 ஆண்கள், 19,515 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என மொத்தம் 37,459 போ் வாக்களித்தனா். இது 73.73 சதவீதமாகும்.

5 ஊராட்சி ஒன்றியங்களிலும் சோ்ந்து மொத்தமுள்ள 3 லட்சத்து 18 ஆயிரத்து 338 வாக்குகளில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 506 வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 73.35 சதவீதமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT