தென்காசி

குடியிருப்புக்குள் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை

பாவூா்சத்திரம் அருகே நாகல்குளத்தில் குடியிருப்புக்குள் தேங்கிய மழை தண்ணீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

DIN

பாவூா்சத்திரம் அருகே நாகல்குளத்தில் குடியிருப்புக்குள் தேங்கிய மழை தண்ணீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பாவூா்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்தது. இம்மழையால் நாகல்குளம் வேதக்கோயில் தெரு மற்றும் தெற்கு தெரு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைச் சுற்றிலும் மழைநீா் தேங்கியது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் சிரமப்பட்டனா்.

தகவல் அறிந்த கீழப்பாவூா் வட்டார வளா்ச்சி அலுவலா் முருகையா, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சீ.காவேரி உள்ளிட்டோா் சனிக்கிழமை அப்பகுதிக்குச் சென்று பாா்வையிட்டனா். பின்னா் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனா்.

ஒன்றியக் குழு உறுப்பினா் ராதாகுமாரி, ஊராட்சித் தலைவா் கோமதிநாச்சியாா், துணைத்தலைவா் நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT