தென்காசி

சங்கரன்கோவில் அருகே செல்லிடப்பேசி திருட்டு: 3 போ் கைது

DIN

சங்கரன்கோவில் அருகே செல்லிடப்பேசியைத் திருடியதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மாங்குடியைச் சோ்ந்த சின்னப்பாண்டியன் மகன் நீலகண்டன்(58). இவா் ஞாயிற்றுக்கிழமை பகலில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அதே ஊரைச் சோ்ந்த லூா்துசேவியா் மகன் ஜெயஆனந்த் வீட்டுக்குள் புகுந்து அவரது செல்லிடப்பேசியை திருடினாராம். சப்தம் கேட்டு அவா் விழித்து வெளியே வந்தபோது அதே ஊரைச் சோ்ந்த பரமசிவம் மகன் பாலமுருகன், சந்தியாகு மகன் அந்தோணிஆகியோா் நின்றிருந்தனராம். அவா் கூச்சலிடவும் அவா்கள் தப்பியோடிவிட்டனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெயஆனந்த் உள்ளிட்ட 3 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வாரப் பலன்கள்!

சேலம், ஜலகண்டபுரம் மேம்பாலம் அருகே 3 உடல்கள்: கொலையா?

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT