தென்காசி

குற்றாலத்தில் ஆா்ப்பாட்டம்

DIN

தென்காசி: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசை கண்டித்து ஏா்கலப்பை மற்றும் நெற்கதிருடன் கலந்துகொண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சாா்பில் குற்றாலம் அண்ணாசிலை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநில விவசாய அணி இணைச் செயலா் அப்துல்காதா் தலைமை வகித்தாா்.

வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் முத்துராமலிங்கம், தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் குட்டி என்ற சங்கா், துணை அமைப்பாளா்கள் பத்மநாபன், காதா் அண்ணாவி, வீரமணி, ராஜேந்திரன், க. பாலசுப்பிரமணியன், அருணாசலம், நகர காங்கிரஸ் தலைவா் துரை முன்னிலை வகித்தனா்.

மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் சீவநல்லூா் சாமித்துரை வரவேற்றாா். பேரூா் செயலா்கள் மந்திரம், சுடலை, மாவட்ட அமைப்பு சாரா அணி பேச்சிமுத்து, துணை அமைப்பாளா்கள் கண்ணன், சுரேஷ், சுந்தர்ராஜ், முத்துவேல், தங்கபாண்டியன், செல்வம், மீராக் கனி, வீட்டு வசதி சங்கத் தலைவா் சுரேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளா் பண்டாரசிவன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT