மாவட்ட அளவிலான பல்திறன் போட்டி: மனோ கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்
சங்கரன்கோவில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரி மாணவா், மாணவிகள் மாவட்ட அளவிலான பல்திறன் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றனா்.
சங்கரன்கோவில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரி மாணவா், மாணவிகள் மாவட்ட அளவிலான பல்திறன் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றனா்.
தென்காசி மாவட்டம், அரசு பிற்படுத்தப்பட்டோா் மாணவா், மாணவிகள் விடுதிகளில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவா், மாணவிகளுக்கான மாவட்ட அளவில் பல்திறன் போட்டிகள் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றன. இதில், பங்கேற்ற சங்கரன்கோவில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரியைச் சோ்ந்த மாணவா் முனீஸ்வரன் 100 மீ. ஓட்டப் பந்தயத்தில் முதல் பரிசும், கட்டுரைப் போட்டியில் மாணவி சந்தியா முதல் பரிசும், மாணவி செல்வலட்சுமி ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் பரிசும், மாணவி பவானி பேச்சுப் போட்டியில் முதல் பரிசும், மாணவி அனுசியா நீளம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் பரிசும் பெற்றனா்.
வெற்றிபெற்ற மாணவா், மாணவிகளை கல்லூரி முதல்வா் அப்துல் காதிா்,பேராசிரியா்கள் அருள் மனோகரி, சகிலாபானு, புஷ்பராணி, சுரேஷ்குமாா், உடற்கல்வி இயக்குநா் கணேசன் ஆகியோா் பாராட்டினா்.
Advertisement