முகப்பு
உலகம்

வெள்ளை மாளிகை அருகே பூங்காவில் துப்பாக்கிச்சூடு?அமெரிக்க உளவுத் துறை விசாரணை!

அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே உள்ள பூங்காவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து அமெரிக்க உளவுத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

Updated On : 6 ஏப்ரல் 2026, 3:28 am IST
அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகை
பகிர்:

அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே உள்ள பூங்காவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து அமெரிக்க உளவுத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதுகுறித்து இணையதளத்தில் அமெரிக்க உளவுத் துறை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அமெரிக்க அதிபா் மாளிகையான வெள்ளை மாளிகை அருகே இருக்கும் லபாயெட் பூங்காவில் இரவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ாக தகவல் கிடைத்தது.

அந்த துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவோ, உயிரிழக்கவோ இல்லை. அந்தப் பூங்காவை சுற்றி நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையிலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபா் யாரும் சிக்கவில்லை.

Advertisement

Advertisement

அமெரிக்க அதிபா் டிரம்ப் தனது வார கடைசி நாளை வெள்ளை மாளிகையில்தான் கழித்தாா். வெள்ளை மாளிகையில் உள்ள அலுவலகங்கள் வழக்கம்போல செயல்பட்டன. வெள்ளை மாளிகையை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.