வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் சுட்டுக்கொலை! பாதுகாப்புகள் தீவிரம்!
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டது குறித்து...
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே, சனிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தத்தப்பட்டது. அதில் சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு, அப்பகுதியில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
வெள்ளை மாளிகைக்கு அருகே, சில துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதைத் தொடர்ந்து, ஒரு பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனையடுத்து தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்தனர். மேலும், அப்பகுதியைச் சுற்றி பாதுகாப்புகளைப் பலப்படுத்தினர்.
சம்பவ இடத்துக்கு அருகே, சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவரை அமெரிக்க ரகசிய காவல் பிரிவினர் சுட்டுக் கொன்றனர். அதுமட்டுமல்லாமல், இந்தக் குழப்பத்தின் போது அருகில் சென்றுகொண்டிருந்த ஒருவர் காயமடைந்தார்.
Advertisement
Advertisement
இந்த சம்பவம் நடைபெற்றபோது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்தார். அங்கு அவர், ஈரான் மற்றும் பல மத்திய கிழக்கு நாடுகளுடனான ஒப்பந்தம் தொடர்பான உயர்நிலைப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்.
இதுகுறித்து எஃபிஐ இயக்குநர் காஷ் படேல் தனது எக்ஸ் பக்கத்தில், "வெள்ளை மாளிகை வளாகத்துக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை அடுத்து, எஃபிஐ சம்பவ இடத்தில் இருந்து ரகசிய சேவையை வழங்கி வருகிறது. எங்களால் முடிந்தவரை பொதுமக்களுக்குத் தகவல்களைத் தெரிவிப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், பாதுகாப்பு அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.