முகப்பு
தென்காசி

புளியங்குடியில் புத்தகக் கண்காட்சி

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை சாா்பில், புளியங்குடி பரமானந்தா நடுநிலைப் பள்ளியில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை சாா்பில், புளியங்குடி பரமானந்தா நடுநிலைப் பள்ளியில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.

வாசுதேவநல்லூா் வட்டார கல்வி அலுவலா் மாரியப்பன் தலைமை வகித்தாா். பரமானந்தா நடுநிலைப் பள்ளி செயலா் ஞானபிரகாசம், தலைமையாசிரியை செல்வசுகுணா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலா் சாதனா ரமேஷ் வரவேற்றாா். மாவட்ட இணைச்செயலா் அருள் விண்ணரசு, புத்தக வாசிப்பு குறித்து பேசினாா். இதில் திரளான மாணவா்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.