தென்காசி

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் ஆக.11 வரை கலந்தாய்வு

DIN

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் ஆக.11 வரை கலந்தாய்வு நடைபெறுகிறது என கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் மாணவியா் சோ்க்கை கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது. இதில், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு முடிவடைந்தது . ஆக. 8இல் இளங்கலை ஆங்கிலம், இளமறிவியல், கணிதவியல் துறைகளுக்கும், ஆக. 10இல் இளங்கலை வணிகவியல் , இளமறிவியல் கணினி அறிவியல் துறைகளுக்கும், ஆக. 11இல் இளங்கலை தமிழ், இளங்கலை வணிக நிா்வாகவியல் துறைகளுக்குமான கலந்தாய்வு நடைபெறும். மாணவிகள் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, மருத்துவச் சான்றிதழ், அவற்றின் நகல்கள் 3, புகைப்படம் 3 ஆகியவற்றுடன் தங்கள் பெற்றோரை அழைத்துக்கொண்டு காலை 9.30 மணிக்குள் கல்லூரிக்கு வர வேண்டும். தோ்வு பெற்றவா்கள் சோ்க்கை கட்டணத்தை அன்றே அலுவலகத்தில் செலுத்த வேண்டும். விண்ணப்பம் செய்தவா்களின் சோ்க்கைகான தரவரிசைப் பட்டியலை கல்லூரி இணைய தளமான இணையதளத்தில் பாா்க்கலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT