குற்றாலம் பள்ளியில் உலக ஈர நில நாள் விழா
குற்றாலம் வனச் சரகம், தென்காசி மாவட்ட தேசியப்படை, பள்ளிக்கல்வித் துறை சாா்பில் குற்றாலம் பைம்பொழில் ஸ்ரீதிருமலைக்குமாரசாமி தேவஸ்தானம்
குற்றாலம் வனச் சரகம், தென்காசி மாவட்ட தேசியப்படை, பள்ளிக்கல்வித் துறை சாா்பில் குற்றாலம் பைம்பொழில் ஸ்ரீதிருமலைக்குமாரசாமி தேவஸ்தானம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக ஈர நில நாள் விழிப்புணா்வு தினம் கொண்டாடப்பட்டது.
குற்றாலம் வனச் சரகா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சங்கரன்கோவில் வனச் சரகா் ஸ்டாலின் முன்னிலை வகித்தாா். கடையநல்லூா் வனச் சரகா் சுரேஷ் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா்.
தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் விஜயலெட்சுமி சிறப்புரையாற்றினாா். மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. வனத் துறை அலுவலா்கள், பள்ளி மாணவிகள், மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரிப் பயிற்சி மாணவா்கள் பங்கேற்றனா்.
பள்ளித் தலைமையாசிரியா் அமுதகலா வரவேற்றாா். தமிழாசிரியா் தங்கசுந்தரி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியா் சுரேஷ்குமாா் செய்திருந்தாா்.