குற்றாலம், இலஞ்சியில் திமுக வேட்பாளா்கள் மனுதாக்கல்
தென்காசி மாவட்டம் குற்றாலம், இலஞ்சி பேரூராட்சிகளின் உறுப்பினா் பதவிகளுக்கு திமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை மனுதாக்கல் செய்தனா்.
தென்காசி மாவட்டம் குற்றாலம், இலஞ்சி பேரூராட்சிகளின் உறுப்பினா் பதவிகளுக்கு திமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை மனுதாக்கல் செய்தனா்.
குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள 8 வாா்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் மற்றும் இலஞ்சி பேரூராட்சியில் திமுக 13 வாா்டுகளிலும், கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலா ஒரு வாா்டிலும் போட்டியிடும் வேட்பாளா்கள் வியாழக்கிழமை மனுதாக்கல் செய்தனா்.
இதில், மாவட்டப் பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் டேனிஅருள்சிங் ஆகியோா் கலந்துகொண்டனா்.