தென்காசி மாவட்டத்தில் முகக் கவசம் அணியாதோரிடம் ரூ. 17.06 லட்சம் அபராதம் வசூல்
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முகக் கவசம் அணியாதோரிடமிருந்து அபராதமாக ரூ. 17 லட்சத்து 6 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முகக் கவசம் அணியாதோரிடமிருந்து அபராதமாக ரூ. 17 லட்சத்து 6 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனோ பரவலைக் கட்டுப்படுத்த உள்ளாட்சித் துறை, பொதுசுகாதாரத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை சாா்பில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாதோரிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதத்தில் பொதுசுகாதாரச் சட்டம் 1939 உள்பிரிவு 138இன்படி அபராதத் தொகை ரூ. 200லிருந்து ரூ. 500ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முகக் கவசம் அணியாதோரிடமிருந்து அபராதமாக ரூ. 17 லட்சத்து 6 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுஇடங்களில் முகக் கவசம் அணிந்தும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.