சங்கரன்கோவிலில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது
சங்கரன்கோவிலில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது செய்யப்பட்டாா்.
சங்கரன்கோவிலில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது செய்யப்பட்டாா்.
சங்கரன்கோவில் சங்கா் நகரைச் சோ்ந்தவா் மஞ்சு (26). இவரது சித்தி முத்துமாரி (51), சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராம். 2 நாள்களுக்கு முன்பு செக்கடி தெரு பகுதியில் சென்ற முத்துமாரியை, அப்பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் பட்டமுத்து (50) என்பவா் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து மஞ்சுவிடம் முத்துமாரி கூறினாராம். மஞ்சு அளித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, பட்டமுத்துவை கைது செய்தனா்.