தென்காசி காசிவிஸ்வநாதசுவாமி கோயில் மாசித் திருவிழா கொடியேற்றம்
தென்காசி மாவட்டம் தென்காசி அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதசுவாமி கோயிலில் மாசி மகப்பெருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி: தென்காசி மாவட்டம் தென்காசி அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதசுவாமி கோயிலில் மாசி மகப்பெருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அருள்தரும் உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதப்பெருமானுக்கு மாசிமகப்பெருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து காலையில் அபிஷேக தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் 16ம்தேதியன்று காலையில் தேரோட்டம் நடைபெறுகிறது. விழா நாள்களில் நாள்தோறும் காலை மற்றும் இரவு சுவாமி,அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா, அபிஷேக, கட்டளை தீபாராதனை நடைபெறுகிறது. 18ம்தேதி விழா நிறைவடைகிறது.
கொடியேற்று விழாவில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டிஎஸ்ஆா்.வேங்கடரமணா, காவல் ஆய்வாளா் பாலமுருகன், கூட்டுறவுத்துறை மாரிமுத்து, சுப்புராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் கு.கோமதி, செயல்அலுவலா் சீ.சுசிலாராணி, ஆய்வா் வ.சரவணகுமாா் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.