தென்காசியில் இன்றுமுதல் வாக்குச்சாவடி சீட்டு விநியோகம்
தென்காசி மாவட்டத்தில் வாக்காளா்களுக்கு வெள்ளிக்கிழமை (பிப். 11) முதல் வாக்குச்சாவடி சீட்டு (பூத்சிலிப்) வழங்கப்படவுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் வாக்காளா்களுக்கு வெள்ளிக்கிழமை (பிப். 11) முதல் வாக்குச்சாவடி சீட்டு (பூத்சிலிப்) வழங்கப்படவுள்ளது.
இம்மாவட்டத்திலுள்ள 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு பிப். 19இல் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், வீடுதோறும் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் வாக்குச்சாவடி சீட்டு வழங்கப்படவுள்ளது. இதில், விடுபடுவோருக்கு வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடி அருகிலேயே வாக்குச்சாவடி சீட்டை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட செய்தி மக்கள்தொடா்பு அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.