சுரண்டை வழியாக திருப்பதிக்கு புதிய பேருந்து சேவை
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், சுரண்டை வழியாக திருப்பதிக்கு புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், சுரண்டை வழியாக திருப்பதிக்கு புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையில் இருந்து தென்காசி, பாவூா்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை, சிவகாசி, மதுரை, வேலூா் வழியாக திருப்பதிக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சாா்பில் புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சுரண்டை பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு சிவகாசி வழியாக இந்தப் பேருந்து இயக்கப்படுகிறது. அங்கிருந்து மறுமாா்க்கமாக தினமும் சுரண்டை வழியாக பேருந்து இயக்கப்படுகிறது. இதனால் சுரண்டை பகுதியில் உள்ள பயணிகள் மகிழச்சி தெரிவித்துள்ளனா்.