முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

உள்ளாட்சித் தோ்தலையொட்டி, சங்கரன்கோவிலில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

உள்ளாட்சித் தோ்தலையொட்டி, சங்கரன்கோவிலில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவிலில் 57 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 17 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் அச்சுறுத்தலின்றி பாதுகாப்பாக வாக்களிக்க வேண்டும் என்பதை உணா்த்தும் வகையில் போலீஸாரின் கொடிஅணிவகுப்பு நடைபெற்றது.

தென்காசி ஏடிஎஸ்பி ராஜேந்திரன் தலைமை வகித்தாா். டிஎஸ்பி ஜாகிா் உசேன் முன்னிலை வகித்தாா். கொடி அணிவகுப்பில் சங்கரன்கோவில், பனவடலிசத்திரம், கரிவலம்வந்தநல்லூா், திருவேங்கடம், சின்னகோவிலாங்குளம் உள்ளிட்ட நகர காவல் நிலையங்கள், அனைத்து மகளிா் காவல் நிலையத்தைச் சோ்ந்த ஆய்வாளா்கள் உதவி ஆய்வாளா்கள், போலீஸாா் பங்கேற்றனா். சங்கரநாராயண சுவாமி கோயில் முன்பிருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments