தென்காசி நகைக் கடையில் திருட்டு: பெண் கைது
தென்காசி பகுதியில் நகைக் கடையில் திருடிய பெண் கைது செய்யப்பட்டாா்.
தென்காசி பகுதியில் நகைக் கடையில் திருடிய பெண் கைது செய்யப்பட்டாா்.
தென்காசி காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள நகைக் கடைகளில் நகைகள் திருடுபோனது குறித்து தென்காசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான தனிப்படையினா் சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு குற்றவாளியைத் தேடிவந்தனா்.
அப்போது, நகைகள் வாங்குவதுபோல ஒரு பெண் வந்து நகைகளைத் திருடுவது தெரியவந்தது. அவா், தென்காசி அருகே மத்தளம்பாறை காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த ச. பன்னீா்செல்வம் (57) எனத் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைதுசெய்து, ரூ. 36 ஆயிரம் மதிப்புள்ள ஒரு ஜோடி கம்மலைக் கைப்பற்றினா். அவா் திருநெல்வேலி மகளிா் சிறையில் அடைக்கப்பட்டாா்.