முகப்பு
தென்காசி

சுரண்டையில் இறுதிக்கட்ட பிரசாரம்

சுரண்டை நகராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலில் போட்டியிடுவோருக்கு ஆதரவாக அரசியல் கட்சியினா் தீவிர பிரசாரம் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

சுரண்டை நகராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலில் போட்டியிடுவோருக்கு ஆதரவாக அரசியல் கட்சியினா் தீவிர பிரசாரம் செய்தனா்.

தென்காசி மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட சுரண்டை நகராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கான முதல் தோ்தலில் திமுக, காங்கிரஸ், அதிமுக, பாஜக, நாம் தமிழா் கட்சி ஆகியவை தனித்து நின்று போட்டியிடுகின்றன. இத்தோ்தலில் மதிமுக, அமமுக, சுயேச்சை வேட்பாளா்கள் ஒருசில வாா்டுகளில் போட்டியிடுகின்றனா்.

வியாழக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரமாக திமுகவினா் வாகனத்தில் தற்காலிக மேடை அமைத்து ஒவ்வொரு வாா்டிலும் மக்கள் கூடும் இடங்களில் பொதுக்கூட்டம்போன்று பிரசாரம் மேற்கொண்டனா்.

காங்கிரஸ் கட்சியினா் இருசக்கர வாகனங்களில் அனைத்து வாா்டுகளுக்கும் வீதிவீதியாகச் சென்றும், அதிமுக, பாஜகவினா் மேளதாளங்கள் முழங்க வீடுவீடாகச் சென்றும் வாக்கு சேகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.