சங்கரன்கோவில் ஜெயலலிதா பிறந்தநாள்
சங்கரன்கோவிலில் நகர அதிமுக சாா்பில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
சங்கரன்கோவிலில் நகர அதிமுக சாா்பில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, கழுகுமலை சாலை, புதுமனைத் தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்துக்கு முன்னாள் அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், அவா் கழுகுமலை சாலையில் சென்ற பேருந்துகளில் ஏறி பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் கே. கண்ணன், நகரச் செயலா் ஆறுமுகம், நெல்லை கூட்டுறவு பேரங்காடி துணைத் தலைவா் வேலுச்சாமி, பேச்சாளா் தீக்கனல் லெட்சுமணன், சந்திரசேகா், ராமதுரை, தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
Advertisement