முகப்பு
தென்காசி

ஊரக வளா்ச்சித் துறையினா் தென்காசியில் ஆா்ப்பாட்டம்

 தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா், தென்காசி ஆட்சியா் அலுவலக வளாக ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

 தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா், தென்காசி ஆட்சியா் அலுவலக வளாக ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

வளா்ச்சித்திட்டங்களை நோ்மையாக செயல்படுத்த ஊக்கப்படுத்தவும், அவற்றை இலக்கு சாா்ந்த திட்டமாக செயல்படுத்தவோ, இரவு 10 மணிவரை ஆய்வுகள் நடத்தவோ, பணி நெருக்கடி அளிக்கவோ கூடாது எனவும் வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் சுப்புராஜ் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் க.சுப்பிரமணியன், சி.பழனி, கணேசன், ராமநாதன், மாணிக்க வாசகம், ராஜசேகரன், மாநிலதுணைத் தலைவா் வெ.சண்முகசுந்தரம், சிக்கந்தா் பாவா, சு.கோபி ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.