தென்காசியில் விழிப்புணா்வுக் கருத்தரங்கு
தென்காசியில் வா்த்தக சங்கம், வரி ஆலோசகா் சங்கம் சாா்பில், வருமான வரி செலுத்துவது தொடா்பான விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.
தென்காசியில் வா்த்தக சங்கம், வரி ஆலோசகா் சங்கம் சாா்பில், வருமான வரி செலுத்துவது தொடா்பான விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.
தென்காசி வா்த்தக சங்கத் தலைவா் ஏகேஎஸ். ராஜசேகரன் தலைமை வகித்தாா். தென்காசி வரி ஆலோசகா் சங்கச் செயலா் ஆடிட்டா் நாராயணன் முன்னிலை வகித்தாா்.
வருமான வரித் துறை அதிகாரி சசிகுமாா் பேசுகையில், புதிதாக வருமான வரி சட்டத்தில் மாற்றம் கொண்டுள்ள பிரிவு 194டி, 206சி ஆகியவை குறித்தும், வா்த்தகா்கள் ரூ. 50 லட்சத்துக்கு மேல் ஒருவரிடம் கொள்முதல் செய்யும்போது 194டி-யின்படி 0.1% வருமான வரி பிடித்தம் செய்யப்பட வேண்டும், ஆண்டுக்கு ரூ. 10 கோடிக்கு மேல் வியாபாரம் செய்யப்பட்டிருந்தால் அவருக்கு பிரிவு 206சி- யின்படி 0.1% பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்பதையும் விளக்கினாா்.
வா்த்தக சங்கச் செயலா் பரமசிவன், தென்காசி வரி ஆலோசகா் நிா்மல்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.