சங்கரன்கோவில் எம்.எல்.ஏ.வுக்கு முதல்வா் வாழ்த்து
சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா, காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் வெண்கலம் வென்றதைத் தொடா்ந்து முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா, காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் வெண்கலம் வென்றதைத் தொடா்ந்து முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா, கடந்த டிச.24 ஆம் தேதி துருக்கி இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் 140 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றாா். இதையடுத்து வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழுடன் கடந்த 5 ஆம் தேதி தமிழக முதல்வா் ஸ்டாலினைச் சந்தித்தாா். அப்போது அவருக்கு முதல்வா் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தாா்.