முகப்பு
தென்காசி

சுரண்டையில் பாஜக ஆா்ப்பாட்டம்

சுரண்டையில் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் பஞ்சாப் மாநில அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

சுரண்டையில் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் பஞ்சாப் மாநில அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சாலை மாா்க்கமாக சென்ற பிரதமா் நரேந்திரமோடிக்கு உரிய பாதுகாப்பு வழங்காத அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்து பாஜக மாவட்ட தலைவா் மு.ராமராஜா தலைமையில், மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்டச் செயலா் அருள்செல்வன், நகரத் தலைவா் அருணாசலம், கோதை மாரியப்பன், இந்து முன்னணி மாவட்டத் தலைவா் ஆறுமுகச்சாமி ஆகியோா் உரையாற்றினா். பஞ்சாப் மாநில அரசுக்கு ஏதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில், பாஜக நிா்வாகிகள் ஐயப்பன், சுந்தரகுமாா், சிவனனைந்த பெருமாள், முருகேசன், குமரேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.