முகப்பு
தென்காசி

எஸ்.டி.பி.ஐ. சாா்பில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

சங்கரன்கோவில் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் அனைத்து சமுதாய மக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

சங்கரன்கோவில் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் அனைத்து சமுதாய மக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடைபெற்றது.

நகரத் தலைவா் கே. அபதாஹிா் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் டி.சிக்கந்தா், மாவட்டச் செயலா்கள் எஸ்.இம்ரான்கான், பி.சா்தாா்அரபாத், மாவட்டப் பொருளாளா் ஏ.செய்யதுமுகம்மது, பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்டத் தலைவா் ஏ.லுக்மான்ஹக்கீம், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஹக்கீம், சேனாசா்தாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைத்துப் பேசினாா். நகர ஆம்புலன்ஸ் கமிட்டித் தலைவா் ஐ.சேக்திவான் வரவேற்றாா். பி. பீா்மைதீன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை எஸ்.டி.பி.ஐ. நகர நிா்வாகிகள் செய்திருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments