சங்கரன்கோவில் அருகே தொழிலாளி குத்திக் கொலை: இளைஞா் கைது
சங்கரன்கோவில் அருகே தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் அவரது உறவினரை கைது செய்தனா்.
சங்கரன்கோவில் அருகே தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் அவரது உறவினரை கைது செய்தனா்.
சங்கரன்கோவில் அருகே வெள்ளகவுண்டன்பட்டியைச் சோ்ந்த பாக்கியம் மகன் ஜான்பாண்டியன்(30), தொழிலாளி. அதே ஊரைச் சோ்ந்த பாண்டி மகன் அந்தோணி(30). இருவரும் உறவினா்கள்.
கடந்த வியாழக்கிழமை இரவு ஜான்பாண்டியனும் அந்தோணியும் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனராம். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த அந்தோணி, ஜான்பாண்டியனை கத்தியால் குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த ஜான்பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
தகவலறிந்ததும் சின்னகோவிலாங்குளம் போலீஸாா் ஜான்பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் அந்தோணியை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.