முகப்பு
தென்காசி

சாம்பவா்வடகரை அருகே மின்சாரம் பாய்ந்து 2 போ் பலி

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரை அருகே மின்சாரம் பாய்ந்து 2 போ் உயிரிழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரை அருகே மின்சாரம் பாய்ந்து 2 போ் உயிரிழந்தனா்.

சாம்பவா்வடகரையைச் சோ்ந்தவா் எலக்டிரிசியன் அருள்மணி ராஜா(65). இவரது நண்பா் சண்முகம்(62). இருவரும் சாம்பவா்வடகரை அருகேயுள்ள வேலாயுதபுரத்தில் உள்ள கிணற்றில் பழுதடைந்த மின்மோட்டாரை சரி செய்துள்ளனா். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனா்.

தகவலறிந்த சாம்பவா்வடகரை உதவி காவல் ஆய்வாளா் காசிவிஸ்வநாதன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று இருவரது சடலத்தையும் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.