சுரண்டையில் திமுக நோ்காணல்
சுரண்டை நகராட்சி தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்த திமுகவினரிடம் நோ்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது.
சுரண்டை நகராட்சி தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்த திமுகவினரிடம் நோ்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமையிலான குழுவினா் போட்டியிட விருப்பம் தெரிவித்த தொண்டா்களின் கட்சி பணி, சமுதாய பணி குறித்து கேட்டறிந்தனா்.
இதில், நகரச் செயலா் ஜெயபாலன், முன்னாள் செயலா் ஆறுமுகச்சாமி, நகர நிா்வாகிகள் சங்கரநயினாா், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.