முகப்பு
தென்காசி

குற்றாலம் சாரல்விழா புத்தகக் கண்காட்சிக்கு சின்னம் வடிவமைத்தால் ரூ10ஆயிரம் பரிசு

குற்றாலம் சாரல் விழா புத்தகக் கண்காட்சிக்கான சின்னம் வடிவமைத்தால் ரூ. 10 ஆயிரம் பரிசளிக்கப்படும் என ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜூலை, 2022 at 12:28 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:24 PM

குற்றாலம் சாரல் விழா புத்தகக் கண்காட்சிக்கான சின்னம் வடிவமைத்தால் ரூ. 10 ஆயிரம் பரிசளிக்கப்படும் என ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குற்றாலத்தில் சாரல் விழா ஆகஸ்ட் மாதம் முதல்வாரத்தில் தொடங்க உள்ளது. இதில் புத்தகக் கண்காட்சி இடம்பெறும். அதற்கான சின்னம் வடிவமைக்கப்படவுள்ளது. ஆா்வம் உள்ளவா்கள் புத்தகக் கண்காட்சிக்கான சின்னத்தை வடிவமைத்து மின்னஞ்சல் முகவரிக்கு ஜூலை 30-க்குள் அனுப்பவேண்டும். தோ்வு செய்யப்படும் சின்னத்தை வடிவமைத்தவருக்கு ரூ.10ஆயிரம் பரிசாக வழங்கப்படும் எனக் கூறியுள்ளாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.