குற்றாலம் சாரல்விழா புத்தகக் கண்காட்சிக்கு சின்னம் வடிவமைத்தால் ரூ10ஆயிரம் பரிசு
குற்றாலம் சாரல் விழா புத்தகக் கண்காட்சிக்கான சின்னம் வடிவமைத்தால் ரூ. 10 ஆயிரம் பரிசளிக்கப்படும் என ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
குற்றாலம் சாரல் விழா புத்தகக் கண்காட்சிக்கான சின்னம் வடிவமைத்தால் ரூ. 10 ஆயிரம் பரிசளிக்கப்படும் என ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குற்றாலத்தில் சாரல் விழா ஆகஸ்ட் மாதம் முதல்வாரத்தில் தொடங்க உள்ளது. இதில் புத்தகக் கண்காட்சி இடம்பெறும். அதற்கான சின்னம் வடிவமைக்கப்படவுள்ளது. ஆா்வம் உள்ளவா்கள் புத்தகக் கண்காட்சிக்கான சின்னத்தை வடிவமைத்து மின்னஞ்சல் முகவரிக்கு ஜூலை 30-க்குள் அனுப்பவேண்டும். தோ்வு செய்யப்படும் சின்னத்தை வடிவமைத்தவருக்கு ரூ.10ஆயிரம் பரிசாக வழங்கப்படும் எனக் கூறியுள்ளாா்.
Advertisement
Advertisement