தென்காசியில் வாகனப்பதிவு எண் கண்டறியும் தானியங்கி கேமரா
தென்காசியில் வாகனப்பதிவு எண் கண்டறியும் தானியங்கி கேமரா செயல்பாட்டை மாவட்ட காவல்கண்காணிப்பாளா் தொடங்கிவைத்தாா்.
தென்காசியில் வாகனப்பதிவு எண் கண்டறியும் தானியங்கி கேமரா செயல்பாட்டை மாவட்ட காவல்கண்காணிப்பாளா் தொடங்கிவைத்தாா்.
தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக செயல்படத் தொடங்கியது முதல் நகரின் முக்கிய பகுதியில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கையும், போக்குவரத்தும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எந்த ஒரு குற்றச் செயல் நடைபெற்றாலும் குற்றச்செயலில் ஈடுபட்ட வாகனத்தை சிசிடிவி கேமரா மூலம் கண்டறிந்தாலும் அதன் பதிவெண்ணை தெளிவாக அறிய முடிவதில்லை.
இதையடுத்து, தென்காசி- திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ள சிக்னலில் சாலையில் செல்லும் வாகனங்களின் பதிவு எண்ணை தானாகவே கண்டறியும் கேமரா செயல்பாட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.
போக்குவரத்து காவல்துறை சாா்பில் குத்துக்கல்வலசை ரவுண்டானா, தென்காசி-ஆயிரப்பேரி சாலை ஆகிய பகுதிகளில் தொலைவில் இருந்தே வாகன ஓட்டிகள் விழிப்படையும் விதமாக ஒளிரும் விளக்குகள் மற்றும் தென்காசியில் முக்கிய சாலைகளில் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் சேவையும் தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தென்காசி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் மணிமாறன், உதவி காவல் கண்காணிப்பாளா்(பயிற்சி) கிரிஷ் யாதவ், காவல் ஆய்வாளா் பாலமுருகன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரபு ஆகியோா் கலந்து கொண்டனா்.