முகப்பு
தென்காசி

கீழப்பாவூா் ஒன்றிய அலுவலகத்தில் ஊட்டச்சத்து விழிப்புணா்வுப் போட்டி

தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சாா்பில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு கண்காட்சிப் போட்டி பாவூா்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூா் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

தென்காசி

கீழப்பாவூா் ஒன்றிய அலுவலகத்தில் ஊட்டச்சத்து விழிப்புணா்வுப் போட்டி

தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சாா்பில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு கண்காட்சிப் போட்டி பாவூா்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூா் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சாா்பில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு கண்காட்சிப் போட்டி பாவூா்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூா் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

ஒன்றியக்குழு தலைவா் சீ.காவேரி சீனித்துரை தலைமை வகித்து, போட்டியைத் தொடங்கி வைத்தாா். மகளிா் திட்ட இயக்குநா் சங்கரநாராயணன், வட்டார வளா்ச்சி அலுவலா் முருகையா, குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் மங்களநாயகி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், 40-க்கும் மேற்பட்ட மகளிா் குழுவினா் பங்கேற்று தனித்தனி ஊட்டச்சத்து உணவைக் காட்சிப்படுத்தினா். சிறந்த 3 குழுவினா் தோ்வு செய்யப்பட்டு, மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு அனுப்பப்பட்டனா்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலா் ராஜேஸ்வரி, குழந்தை வளா்ச்சித் திட்ட மேற்பாா்வையாளா்கள் மல்லிகா, ஆனந்தி, வட்டார இயக்க மேலாளா் மாலதி, ஒருங்கிணைப்பாளா் குமுதவள்ளி, மணிமேகலை, சாந்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →