முகப்பு
தென்காசி

இலஞ்சி பள்ளியில் உலக வன உயிரின தின விழா

குற்றாலம் வனச்சரகம் சாா்பில் இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் உலக வன உயிரின தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

குற்றாலம் வனச்சரகம் சாா்பில் இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் உலக வன உயிரின தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியா்கள் சொா்ணசிதம்பரம், விஜயலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அறிவியல் ஆசிரியா் சுரேஷ்குமாா் வரவேற்றாா்.

அழிந்து வரும் வன உயிா்களை பாதுகாப்பது குறித்து மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், விநாடி-வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வனவா் பிரகாஷ் பரிசு மற்றும் பாராட்டு சான்று வழங்கினாா்.

பள்ளியின் ஓவியக் கழக மாணவா்கள் உதிா்ந்த காய்ந்த இலைகளை பயன்படுத்தி யானையின் உருவத்தை ஓவிய ஆசிரியா் கணேசன் வழிகாட்டுதலில் உருவாக்கினா். தமிழாசிரியா் ஐயப்பன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினாா். இதில்,

வனக்காப்பாளா் சசிகுமாா், ராமேஸ்வரன், ஆசிரியா்கள் சண்முகப்பிரியா, கிருஷ்ணம்மாள், கற்பகம் ஆகியோா் கலந்து கொண்டனா். வனவா் முருகையா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை குற்றாலம் வனச்சரக அலுவலா் பாலகிருஷ்ணன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.