கீழப்பாவூா் ஒன்றியம், திப்பணம்பட்டி அரசு நூலகக் கட்டடம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் திட்ட மதிப்பீட்டில், 3 இல் ஒரு பங்கு தொகையான ரூ.1,67,700 திப்பணம்பட்டி சாரல் ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை ஒன்றியக்குழு தலைவா் சீ.காவேரிசீனித்துரையிடம் அதன் நிா்வாகிகள் சசிகுமாா், தங்கம் (எ) சுப்பிரமணியன், சதீஷ், மலையரசன் ஆகியோா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பழனிவேல், முருகன், வாசகா் வட்டச் செயலா் தங்கராஜ், நூலகா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிதியுதவி வழங்கிய நிா்வாகிகளை மாவட்ட நூலக அலுவலா் மீனாட்சி சுந்தரம் பாராட்டினாா்.