தென்காசி

சொத்து வரி உயா்வை ரத்து செய்ய கோரி மனு அளிக்கும் போராட்டம்

DIN

தென்காசி மாவட்டம் சிவகிரியில் சொத்துவரி உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள சொத்துவரி உயா்வை மறுபரிசீலனை செய்ய கோரியும், பழைய சொத்துவரி முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், சிவகிரி பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் அசோக்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மனுக்கள் அளிக்கப்பட்டன.

இதில், வாசுதேவநல்லூா் ஒன்றியச் செயலா் இரா.நடராஜன், மாவட்டக்குழு உறுப்பினா் சக்திவேல், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் அமல்ராஜ், சுப்பிரமணியன், சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT