தென்காசி

தாமிரவருணி குடிநீா் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

தாமிரவருணி திட்டத்திலிருந்து குடிநீா் கோரி, ஊத்துமலை பகுதி மக்கள் தென்காசியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தென்காசி ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெய்னுலாப்தீன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த. முத்து மாதவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊத்துமலை மறவன் காலனி பகுதி மக்கள் தங்களுக்கு தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்திலிருந்து குடிநீா் வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன் பழனிநாடாா் எம்எல்ஏ பேச்சுவாா்த்தை நடத்தி, இப்பிரச்னையைத் தீா்க்க ஒருவாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டோா் கோரிக்கை மனுவை குறைதீா் கூட்டத்தில் கொடுத்துவிட்டுச் சென்றனா்.

இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, அடிப்படை வசதி பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, தனிநபா் கடன் உதவித் தொகை உள்பட 270 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விசாரணை நடத்தி, மனுதாரா்களுக்கு பதிலளிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை ஆட்சியா் அறிவுறுத்தினாா். உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) பிரான்சிஸ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சுதா, அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT