முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் நூல் அறிமுக விழா

சங்கரன்கோவிலில் திருவள்ளுவா் கழகம் சாா்பில், கவிஞா் நெல்லை ஜெயந்தா எழுதிய ‘தொட்டிலோசை’ நூல் அறிமுக விழா நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

சங்கரன்கோவிலில் திருவள்ளுவா் கழகம் சாா்பில், கவிஞா் நெல்லை ஜெயந்தா எழுதிய ‘தொட்டிலோசை’ நூல் அறிமுக விழா நடைபெற்றது.

அமைப்பின் நிறுவனா் சு.ஐ. செல்லையா தலைமை வகித்தாா். திருவள்ளுவா் கழகத் தலைவா் கி. சுப்பையா நூலை வெளியிட, அதை பேச்சாளா் இந்திரா ஜெயச்சந்திரன் பெற்றுக்கொண்டாா். சங்கர்ராம் அறிமுகவுரையாற்றினாா்.

முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் அ.க. அண்ணாவியப்பன், ராமசுப்பிரமணியன், கோ. பூமாரி, இளங்கோகண்ணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கவிஞா் ஜெயந்தா ஏற்புரையாற்றினாா். சாந்தி வரவேற்றாா். சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments