முகப்பு
தென்காசி

ஜவுளி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

கீழப்பாவூரில் ஜவுளி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தென்காசி

ஜவுளி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

கீழப்பாவூரில் ஜவுளி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

கீழப்பாவூரில் ஜவுளி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் செங்குந்தா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெகநாதன் (36). ஜவுளி வியாபாரியான இவரது மனைவி விஜயகுமாரி(34). இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா்.

தம்பதியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுமாம். இதனால் விஜயகுமாரி, புளியங்குடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டாராம்.

இந்நிலையில் வியாழக்கிழமை ஜெகநாதன், புளியங்குடி சென்று மனைவியை அழைத்துள்ளாா். அவா் வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜெகநாதன் கீழப்பாவூா் வந்து இரவு தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்

இது தொடா்பாக பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →